தேவையானபொருட்கள்:கேரட்,பீன்ஸ்,கோஸ்,பீட்ரூட்,பச்சைபட்டாணி,வகைக்கு 50 கிராம்.வேகவைத்து மசித்தஉருளைக்கிழங்கு--200 கிராம்
சீரகம்--1 ,ஸ்பூன்
மிளகாய்தூள்--1ஸ்பூன்
மல்லிதூள்-- 1ஸ்பூன்
மஞ்சள்தாள்--1சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது1ஸ்பூன்.
மல்லி இலை--பொடியாக நறுக்கியது--2ஸ்பூன்
உப்பு-தேவையானஅளவு.
மைதா மாவு--2ஸ்பூன்
ப்ரெட் தூள்--200 கிராம்.
எலுமிச்சைச்சாறு 1 ஸ்பூன்
எண்ணெய்--பொரிக்க.
காய்கறிகளை நறுக்கி ஆவியில் வைக வைக்கவும்.ஆறியபின் ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்..சீரகம் போட்டு தாளிக்கவும்.பின் மல்லி இலைகளைப்போட்டுவதக்கவும்.பின் வேகவைத்த காய்கறிகள்.மசித்த உருளைக்கிழங்கு அனைத்தையும் உப்பு சேர்த்து ஈரப்பதம் நன்கு போகும்வரை வதக்கி வைக்கவும்.
மைதா மாவைஅரைடம்ளர் நீரில் நீர்க்க கரைக்கவும்,காய்கறி கலவைஆறியபின் நீங்கள் விரும்பிய வடிவத்தில் தட்டையாகசெய்து.மைதாகரைசலில் நனைத்து உடனே ப்ரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மிளகாய்சாஸ் அல்லது தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக